உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

விவசாயிகளுக்கு பனை விதைகள்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

சூலுார் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு, இலவசமாக பனை விதைகள் வழங்கப்பட உள்ளது, என, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில், பனை விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக, 50 பனை விதைகள் வழங்கப்படும். மொத்தம், 2 ஆயிரத்து, 500 பனை விதைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பனை விதைகள் தேவைப்படுவோர், சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகலாம். ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை