தேர்தலில் ஓட்டளிக்க உறுதிமொழி ஏற்பு
கோவை; 18 வயது பூர்த்தி அடைந்த புதியவாக்களர்களைபட்டியலில் சேர்க்கும் விழிப்புணர்வு முகாம், கோவை இந்துஸ்தான் கல்லுாரியில் நேற்று நடந்தது; கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டார். 'வாக்களர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய ஒத்துழைப்பு அளிப்போம்; தேர்தலில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை செயல்படுத்துவோம்' என உறுதிமொழி ஏற்றனர். இதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர்களை இணைக்கும் முகாம் குமரகுரு, கற்பகம் பல்கலை, கே.பி.ஆர். உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில் நடத்தப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம், 100 சதவீதம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் சேர்க்கும் வரை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்வில், இந்துஸ்தான் கல்லுாரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, மாநகராட்சி துணை கமிஷனர் சுல்தானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.