போக்சோவில் தொழிலாளி கைது
அன்னுார் : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். அன்னுார் அருகே சுக்ரமணி கவுண்டர் புதுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 36. தொழிலாளி. இவர் அன்னுார் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனர்.