மேலும் செய்திகள்
ஸ்ரீவி.,மலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
03-Nov-2024
மேட்டுப்பாளையம் : நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்துள்ளார். இதையடுத்து, காரமடையில் உள்ள கேரளா எல்லையான முள்ளி, கோபனாரியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி ஊட்டி வந்தார். வரும் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் வனப்பகுதியில் பதுங்கியுள்ளனரா, நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காரமடை வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் போலீசார் வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். தொடர் ரோந்து செல்கிறோம், என்றார்.
03-Nov-2024