உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்

சூலுார்; சுல்தான்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, பல்லடம் தன்னார்வலர்கள் சார்பில், எழுது பொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.பேனா, பென்சில், நோட்டுகள், ஸ்கெட்ச் பென்சில்கள், அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. துவக்கப்பள்ளியில் படித்து முடித்து, ஆறாம் வகுப்புக்கு சென்ற மாணவ, மாணவியருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மகர ஜோதி கணேசன், ஆசிரியை ஜெய ஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை