மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
20-Sep-2025
கோவை: ரயில் பயணிகளுக்கான, கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பானது (பி.ஆர்.எஸ்), வரும் தீபாவளி தினத்தில், மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை நேரில் சென்று முன்பதிவு செய்ய, பி.ஆர்.எஸ்., கவுன்டர்கள் செயல்படுகின்றன. ரயில் நிலையங்கள், சில தபால் நிலையங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இவை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணி வரை மட்டும் செயல்படும். இந்நிலையில், வரும் தீபாவளி தினத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தில், பி.ஆர்.எஸ்.,கவுன்டர்கள், ஞாயிற்றுக்கிழமையைப் போல, மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20-Sep-2025