மேலும் செய்திகள்
மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
19-Aug-2025
கோவை; கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்தோறும், மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் காரணமாக, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக இக்குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம், 20, 25வது வார்டு பகுதி மக்களுக்கு, கணபதி, சாய்கிருஷ்ணா திருமண மண்டபம், காவலர் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு முகாம் நடப்பதால், இன்றைய மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19-Aug-2025