காரில் கொண்டு வந்த ரூ. 51,500 பறிமுதல்
சூலுார்: ஜல்லிப்பட்டியில், காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, 51 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சுல்தான்பேட்டை அடுத்த ஜல்லிப்பட்டியில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி முத்துக்குமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அதில், அவ்வழியே காரில் வந்த ஜெயக்குமாரிடம் சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல், 51 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த பணத்தை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.