சகோதயா கால்பந்து 31 அணிகள் பங்கேற்பு
கோவை;கோவை சகோதயா பள்ளிகள் குழு சார்பில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான 7ஏ பிரிவு கால்பந்து போட்டி நடந்தது.கணபதி, கேம்போர்டு சர்வதேச பள்ளியில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், 31 அணிகளில் மொத்தம், 348 மாணவர்கள் விளையாடினர்.இதில், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், பிஏ சர்வதேச பள்ளி முதலிடத்தையும், கேம்போர்டு சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று அசத்தின.17 வயதிற்குட்பட்ட பிரிவில், யுவபாரதி பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும், கேம்போர்டு சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.14 வயதிற்குட்பட்ட பிரிவில், முதல் மற்றும் இரண்டாம் இடத்தை முறையே, யுவபாரதி பப்ளிக் மற்றும் கேம்போர்டு சர்வதேச பள்ளிகள் பிடித்தன.போட்டியில் வென்ற மாணவர்களை, கேம்போர்டு சர்வதேச பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சைல் ஆகியோர் வாழ்த்தினர்.