சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி, ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், 26ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா நடந்தது.விழாவையொட்டி கிராம சாந்தி, அபிஷேகம், பூச்சாட்டுதல் நடந்தது. தொடர்ந்து, அம்மன் தங்க காப்பு அலங்காரம், மறுநாள் அபிஷேகம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு நகைச்சீர், பட்டு கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம், சக்தி கரகம் அழைப்பு, அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல், அக்னி அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாவிளக்கு பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.