உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கார்த்திகை அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை

 கார்த்திகை அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாத அமாவாசை தினமான நேற்று காலை, 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. மாலையில் பிரத்யங்கிராதேவிக்கு சிறப்பு அபிேஷக மற்றும் அலங்கார பூஜை நடடைபெற்றது. வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன்கோவில்களில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி