உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுயம்புவாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சுயம்புவாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பாளையம்; கோவில்பாளையம் அருகே, குரும்பபாளையம், ஸ்ரீ வேதவல்லி சமேத சுயம்பு வாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், விமானம், மண்டபம் மற்றும் பரிவார சன்னதிகள் புனரமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. இன்று காலை 9 :45 மணி முதல் 10: 45 மணிக்குள், மூலவர், விமானம், சொர்க்கவாசல் விமானம், பரிவார மூர்த்திகள், கன்னிமூல கணபதி மற்றும் சுயம்பு வாத பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் ராமானந்த குருபர சுவாமிகள் அருளுரை வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை