பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு பயணம்
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, பாட புத்தகங்கள், வினியோகிக்கும் பணி துவங்கியது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் போது, இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவதற்காக, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன.இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் வகையில், நேற்று முதல், இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள் அனுப்பும் பணிகள் துவங்கியுள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு வழங்கப்படும்,' என்றனர்.