உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அன்னுார்: திம்ம நாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில் திம்ம நாயக்கன்புதுாரில் மகா பைரவர் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.இதையடுத்து பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அன்னுார் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ