உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பு பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

பராமரிப்பு பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

கோவை : சேலம் கோட்ட ரயில்வேயின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எர்ணாகுளம் - டாட்டா நகர்(18190) எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 15, 17 ம் தேதிகளில் போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில் இயக்கப்படும். அதேபோல், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில், 15, 17 ம் தேதிகளில் போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில், மதியம் 12:17 மணிக்கு நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி