உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரளிக்காட்டில் பழங்குடியினர் நடனம்; சூழல் சுற்றுலாவில் புது முயற்சி

பரளிக்காட்டில் பழங்குடியினர் நடனம்; சூழல் சுற்றுலாவில் புது முயற்சி

மேட்டுப்பாளையம்; பரளிக்காட்டில் அடுத்த மாதம் முதல் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி புதிதாக இடம்பெற உள்ளது. கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள் https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து தான் வரவேண்டும். நேரடியாக வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல் என வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பரளிக்காடு உள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியாக அடுத்த மாதம் முதல் சூழல் சுற்றுலாவில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது: பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் அடுத்த மாதம் முதல் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 100 பழங்குடியினர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை