உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூலித்தொழிலாளிகளான தனுஷ்ராஜ், 23 மற்றும் அருண்குமார், 36, இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் இருவரிடமும் இருந்து தலா, 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை