உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலை ரூ.1 குறைப்பு

இளநீர் விலை ரூ.1 குறைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு, 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 12,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, வட மாநிலங்களில், இளநீரின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் வியாபாரிகள், இளநீர் விலையை கணிசமாக குறைக்கின்றனர். ஏற்கனவே அறிவுறுத்தியபடி தேங்காய்க்கு நல்ல விலை இருப்பதால், ஓரிரு மாதம் இளநீர் அறுவடையை நிறுத்தி வைக்க வேண்டும். பின்னர், இளநீர் அறுவடையை துவக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ