உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்பதாவது மண்டல கோ-கோ சக்தி கல்லுாரி அணி சபாஷ்

ஒன்பதாவது மண்டல கோ-கோ சக்தி கல்லுாரி அணி சபாஷ்

கோவை:அண்ணா பல்கலை, 9வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டி சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஷ்வரி துவக்கிவைத்தார். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 31-28 என்ற புள்ளிகளில் சி.ஐ.டி., கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 28-21 என்ற புள்ளிகளில் கே.ஐ.டி., கல்லுாரி அணியை வென்றது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், சி.ஐ.டி., அணி, 25-20 என்ற புள்ளிகளில் கே.ஐ.டி., அணியை வீழ்த்தியது. முதல் மற்றும் இரண்டாம் இடத்துக்கான போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 20-18 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி., டெக்., அணியை வென்று முதலிடம் பிடித்தது. தொடர்ந்து, தடகள போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி