உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: தமிழகஅரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவி - மைய நிர்வாகி (Center Administrator), பதவி - முதுநிலை ஆலோசகர் (Senior Counselor) , பதவி - வழக்கு பணியாளர் (Case worker) , தகவல் தொழில் நுட்ப பணியாளர் (Information technician) , பாதுகாவளர் (Security) , பல் நோக்கு உதவியாளர் (Multi purpose helper) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களும் முழுவிபரங்களும்கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.inயில் உரிய படிவம், பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பழைய கட்டட தரை தளம் கோவை - 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். 0422- 2305126 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ