உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி 2 பேர் படுகாயம்

கார் மோதி 2 பேர் படுகாயம்

குள்ளஞ்சாவடி: கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.புவனகிரி அடுத்த கரிவெட்டி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகாசி மகன், புருஷோத்தமன், 35. இவரது நண்பரான, கருங்குழி பகுதியை சேர்ந்த, அசோக் ராஜ், 35, என்பவருடன் நேற்று முன்தினம், கடலுார் விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார். புருஷோத்தமன் பைக்கை ஓட்டினார். சின்ன தோப்புக்கொல்லை அருகே பைக் சென்ற போது, பின்புறமாக வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த அசோக் ராஜ், புருஷோத்தமன், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை