உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு பரங்கிப்பேட்டையில் துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு பரங்கிப்பேட்டையில் துணிகரம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 31 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரி, 48; இவர், குடும்பத்துடன் கடந்த 2ம் தேதி, கடலுாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். 4ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ. 31 ஆயிரம் பணம், வெள்ளி கொளுசு, வெள்ளி டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, சிவசங்கரி கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை