உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூவராகசுவாமி கோவிலில் தேரோட்டம்

பூவராகசுவாமி கோவிலில் தேரோட்டம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்றுநகர வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் தேர் திருவிழா நடந்தது. முன்னதாக அதிகாலை பூவராகசுவாமி, அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 6.00 மணிக்கு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவியோடு திருத்தேர் வலம் வந்து தேரில் எழுந்தருளினார். விழாவையொட்டி நகரில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது.நாளை மதியம் மட்டையடி உற்சவமும்,இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ