திருவந்திபுரம் அரசு பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
கடலுார்: கடலுார் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடலுார் ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர் விஜயகுமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.அப்போது, தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.