உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி 

மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி 

பண்ருட்டி : மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த எலக்ட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பண்ருட்டி அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்,40; எலக்ட்ரீஷியன். இவர், கடந்த 20ம் தேதி சின்னபுறங்கனி கிராமத்தில் சத்ரியன் வீட்டில் புதிய மின் இணைப்பிற்காக எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காப்பர் கம்பியை எடுத்து மேலிருந்து கீழே போட்டபோது, உயர்மின்அழுத்த கம்பியில் பட்டு பாலமுருகன் மீது மின்சாரம் தாக்கியது.அதில் காயமடைந்த பாலமுருகன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி