மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியை சேர்ந்தவர் பெருமாள், 80; விவசாயி. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிலத்தின் வழியே தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் சுருண்டு விழுந்து இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.