உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பாலக்கொல்லை கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரிந்தது.இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் முருகேசன் மகன் வெங்கடேசன், 50; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி