மேலும் செய்திகள்
இளம்பெண் பலாத்காரம் : வாலிபருக்கு 'குண்டாஸ்'
20-Feb-2025
கடலூர்: விருத்தாசலத்தில் போக்சோ வழக்கில் கைதானவரை, போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். விருத்தாசலம் அடுத்த டி.மாவிடந்தல், சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசு,39. இவர் 17வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக விருத்தாசலம் மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், சந்திரகாசு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
20-Feb-2025