| ADDED : ஜூன் 14, 2024 06:34 AM
பண்ருட்டி: மலட்டாற்றில் அணைக்கட்டி தண்ணீர் திருப்பிவிட மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் சேலம் நீர்வளத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் கடலுார் மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் விவசாயிகள், மலட்டாறு விவசாயிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன், பழனிசாமி, கடலுார் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தனபால், ஒய்வூதியர் சங்க செயலர் கந்தசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம் நீர்வள ஆதார துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ்குமார் சந்தித்தனர்.அப்போது தென்பெண்ணை ஆற்றில் பருவமழையின் போது கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி மலட்டாற்றில் ஊற்று நீரை பெருக்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலுார் டி.எடையார் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தர கோரி மனு அளித்தனர்.தடுப்பணை கட்டுவதால் வெள்ள காலங்களில் உபரி தண்ணீரை கோரையாறு வழியாக அன்ராயநல்லுார் அரசூர் மலட்டாற்றில் திருப்பி விட்டு சுமார் 200 அடி முதல் 400 அடி மணல் ஆழமுள்ள மலட்டாற்றில் ஊற்று நீரை பெருக்கும் பொருட்டு டி.எடையார் அருகில் தென்பெண்ணையாற்று தடுப்பணையை விரைந்து முடிக்க வேண்டும்.இதனால் ஒறையூர், கரும்பூர் ,சின்னப்பேட்டை ,திருத்துறையூர், கண்டரக்கோட்டை பகுதிகளில் மலட்டாற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயரம்.அதனால் அப்பகுதியில் வேளாண்மை செழிக்கும்.விவசாயிகள் பயனடைவர். மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள சுமார் 250 கிராமங்கள் பயன் பெறுவர் என கூறினர்.மனுவை பெற்றுக்கொண்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.