உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

முதியவர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

கடலுார்: கடலுாரில் முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த தங்கலிக்குப்பத்தை சேர்ந்தவர் கண்ணன், 70; இவர், கடந்த நான்கு ஆண்டாக, கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்துக்கொண்டு அதே பகுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு சோனாங்குப்பம் அங்கன்வாடி கட்டடத்தில் படுத்து துாங்கியவர், நேற்ற காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கடலுார் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மகன் தண்டபாணி கொடுத்த புகாரில், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ