உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் பிரதோஷ வழிபாடு

கடலுாரில் பிரதோஷ வழிபாடு

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு நடந்த சனி மகா பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு காலை பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. மாலை மகா மண்டபத்தின் எதிரில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், தேன், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 23 வகையான மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.நந்தி பகவானுக்கு வண்ண மலர்கள், வில்வ மாலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைதொடர்ந்து நந்திக்கு சிறப்பு தீபாரதனைகள் மற்றும் திருமுறை பாராயணம், சிவபுராணம் பாராயணம் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை