மேலும் செய்திகள்
அஷ்டமி வழிபாடு
28-Aug-2024
விருத்தாசலம், : சஷ்டியொட்டி விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இரவு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி, கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
28-Aug-2024