மேலும் செய்திகள்
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வலியுறுத்தல்
09-Feb-2025
கடலுார் : கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் செம்மண்டத்தில் உள்ள கடலுார் மாவட்ட ஓய்வு பெற்றோர் அலுவலகத்தில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.நிகழ்ச்சியில் சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் சண்முகம், துணை செயலாளர் வீராசாமி, ஆனந்தன்,ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனந்தன் நன்றி கூறினார்.
09-Feb-2025