உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் கூட்ரோட்டில் கழிப்பிட வசதி தேவை

வேப்பூர் கூட்ரோட்டில் கழிப்பிட வசதி தேவை

வேப்பூர் : வேப்பூரில், முக்கிய சந்திப்பான கூட்ரோடு பகுதியில் கழிப்பிட வசதியின்றி, பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் தேசிய நெடுஞ் சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் கூட்டுரோடு உள்ளது. இப்பகுதியிலிருந்து சிதம்பரம், மதுரை, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, ஆத்துார், பெரம்பலுார் பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும், வேப்பூரை சுற்றி பள்ளி, கல்லுாரிகள் உள்ளதால் மாணவ, மாணவிகள் அதிகளவில் வருகின்றனர்.இந்நிலையில், பயணிகள் அதிகம் கூடும் இடமான வேப்பூர் கூட்டுரோடு பகுதியில், பொது கழிவறை வசதி இல்லை. பஸ்களில் பல மணி நேரம் பயணம் செய்து வருவோர் கூட்டுரோட்டில் சாலையோர திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உள்ளது.இதனால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வேப்பூர் கூட்டுரோட்டில் பொது கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை