உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது

பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வனச் சுற்றுலா மையம் உள்ளது. 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகளுடன் அமைந்துள்ளது. இங்கு, மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு பெற்றுள்ளது. மேலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள் ஒரே மாதரியாக இருப்பது வியப்பு.பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.கோடை காலங்களில், தினமும் ஆயிரக்கணக்கில், சுற்றுலா பயணிகள் காலை முதலே வந்து குவிந்துவிடுவர். விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.சுற்றுலா பயணிகள் வனக்காடுகளுக்கு சென்று வர, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் படகுகள் இயக்கப்படுகிறது. ஆனால், போதுமான படகுகள் வசதியின்றி, நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து வரும் நிலை உள்ளது. அத்துடன், வனக்காடுகளுக்கு மத்தியில் தங்குவதற்கு இருந்த காட்டேஜ் வசதி இல்லை.இதனால், சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கோடைக்காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு 7,511 சுற்றுலா பயணிகள் குறைவாக வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், வனக்காடுகளுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் இருந்த காட்டேஜ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படவில்லை. கூடுதல் படகு வசதி இல்லை.எனவே, சுற்றுலா பயணிகள் வனக்காடுகளுக்கு மத்தியில் தங்கும் வகையில், காட்டேஜ் மற்றும் கூடுதல் படகுகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், சுற்றுலா பயணிகள் வருகை, பிச்சாவரத்திற்கு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை