உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொடிக்கம்பம் நட்ட போது தே.மு.தி.க., பிரமுகர் பலி 

கொடிக்கம்பம் நட்ட போது தே.மு.தி.க., பிரமுகர் பலி 

பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; தே.மு.தி.க., கிளை துணை செயலர். இவர், நேற்று காலை 9:00 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சிக்கொடி ஏற்றுவதற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார்.அப்போது கம்பத்தை மேலே துாக்கிய போது, கொடிக்கம்பம் மின் கம்பியில் பட்டு அனைவரும் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டனர். இதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கட்சியினர் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, தே.மு.தி.க., மாவட்ட செயலர் சிவக்கொழுந்து ஆறுதல் கூறினார். முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை