உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டையில், மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.பரங்கிப்பேட்டை, வரதராஜ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 43; லாரி டிரைவர். இவரது மனைவி கோமதி, 22; இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன், வெளியூருக்கு வேலைக்கு சென்று வருவதால் மாதத்திற்கு இரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், கோமதி கடலுார் முதுநகரில் உள்ள தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்கினார். கோமதி, தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்குவதை பிரபாகரன் கண்டித்தார்.இந்நிலையில், கோமதி கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !