உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது  

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது  

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் நேற்று நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த எழில்குமார், 42; பூதாமூர் பகுதியை சேர்ந்த சந்துரு, 28, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை