உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்

கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது . கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மொபைல்போன் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், கைதிகள் அறை மற்றும் சிறை வளாகம் முழுவதும் சிறைக்காவலர்கள் சோதனை நடத்தினர். இதில், தொகுதி எண் 7ன் கழிவறை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 2 மொபைல்போன்கள், ஒரு சார்ஜரை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல்போன்கள் பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ