கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் மயங்கி விழுந்த இரண்டு விசாரணை கைதிகள் அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர்.திருச்சி அடுத்த திருவரம்பூரை சேர்ந்தவர் ராஜ் மகன் ராஜ்குமார், 27; குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்தவர் மூட்டை பூச்சி (எ) சம்பத்குமார்,32; இருவரும் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளனர்.உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் நேற்று சிறையில் திடீரென மயங்கி விழுந்தனர். உடன், அவர்களை சிறைக் காவலர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.