உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் விற்ற 6 பேர் கைது

டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் விற்ற 6 பேர் கைது

விருத்தாசலம்: டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கப், வாட்டார் பாட்டில் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலுார் ரோடு டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பெட்டிக் கடையில் பிளாஸ்டிக் கப், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த, விருத்தாசலம், புதுப்பேட்டை ரவிச்சந்திரன், 60; சாத்தமங்கலம் ரமேஷ், 32; ஆகியோரை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேப் போன்று, கம்மாபுரம் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி கப், தண்ணீர் விற்பனை செய்த விருத்தாசலம் வீரபாண்டியன் தெரு சதீஷ், 41; பாஸ்கரன், 49; இனியன் வசந்தகுமார், 34; கீழப்பாளையூர் மகேஷ், 40; ஆகியோரை கம்மாபுரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி