| ADDED : பிப் 19, 2024 06:05 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் உள்ள பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், அரியராவி, பெ.பூவனுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி, சென்னை, அரியலுார் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பஸ் நிலைய நிழற்குடையில் தள்ளு வண்டியில் பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் கால் கடுக்க நீண்டநேரம் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே, பழைய பஸ் நிலைய நிழற்குடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருக்கைகள் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.