உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இணைப்பு சாலை சேதம் சீரமைக்க நடவடிக்கை தேவை

இணைப்பு சாலை சேதம் சீரமைக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம்:குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சின்னவடவாடி - எம்.பட்டி கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி-எம்.பட்டி கிராம இணைப்பு சாலை வழியாக லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சாலை தற்போது பராமரிப்பின்றி, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்கள் பழுது ஏற்படுகிறது. உடல் வலி ஏற்பவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இணைப்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ