அ.தி.மு.க., மகளிரணி கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கடலுார்: இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கடலுாரில் அ.தி.மு.க., வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் ஆரப்பாட்டம் நடந்தது.மகளிரணி செயலாளர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சம்பத் கண்டன உரையாற்றினார். மாநில மகளிரணி துணை செயலாளர் சத்யா, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், செல்வ அழகானந்தம், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், தங்க வினோத்ராஜ், தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவரது படத்தை துடப்பத்தால் அடித்தனர்.