மேலும் செய்திகள்
ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
02-Dec-2025
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், அக்கட்சியின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம் வரவேற்றார். கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி,பாண்டியன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் குமார், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், பேரூராட்சி கவுன்சிலர் ஜெய்சங்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நகர அவை தலைவர் மலை மோகன், ஒன்றிய மீனவரணி செயலாளர் சிவக்குமார், தொழில் நுட்ப செயலாளர்கலைவாணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அகிலநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.
02-Dec-2025