மகா மாரியம்மனுக்கு அமாவாசை வழிபாடு
திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் அமாவாசையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.