உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல மாதங்களாக சீரமைக்காத பஸ் நிலைய ஹைமாஸ் விளக்கு

பல மாதங்களாக சீரமைக்காத பஸ் நிலைய ஹைமாஸ் விளக்கு

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் பழுதடைந்து பல மாதங்களாகியும் ஹைமாஸ் மின் விளக்கு சீரமைக்காமல் இருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் மாநகராட்சி பஸ் நிலையத்தில், இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் உள்ள புறக்காவல் நிலையம் பகுதியில் ைஹமாஸ் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதற்காக, மின் விளக்கு கம்பத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மின் விளக்கு சீரமைக்காமல், தற்காலிகமாக புறக்காவல் நிலையம் மேற்கூரை பகுதியில் மின் விளக்குகள் அமைத்தனர். இதை தொடர்ந்து, ைஹமாஸ் மின் விளக்கு சீரமைக்காமல், கடந்த 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, ைஹமாஸ் மின் விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை