உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியை தாக்கிய  கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய  கணவர் மீது வழக்கு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி வசந்தி, 34. திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில், இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜ்மோகன், வசந்தியை திட்டி, கட்டையால் தாக்கி, மிரட்டல் விடுத்தார்.வசந்தி புகாரின் பேரில், ராஜ்மோகன் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி