உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக, வாலிபரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜிவ்காந்தி, 30; மணிவாசகன், 50. இருவருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த மணிவாசகன், இவரது மகன் மதன், 37; சேட்டு, 46; ஆகியோர் சேர்ந்து ராஜிவ்காந்தியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், மணிவாசகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை