உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு

விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு

விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் சுவாமிக்கு நேற்று காலை 10:30 மணியளவில் சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலித்தனர்.இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், விருத்தாசலம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில்களில் சதுர்த்தி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ